தடங்களுக்கு வருந்துகிறோம் உங்களது செய்திச்சேவை
இன்னும் ஒரு மணித்தியாலயத்தினுள் மீண்டும்
தன் சேவையைத் தொடரும்.
பிரதான செய்தி
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் - தொண்டு நிறுவனங்கள் - அமைப்புக்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்: [Tuesday, 10 February 2009 02:04 PM]
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோசங்களை எழுப்பியதுடன் சர்வதேச நிறுவனங்கள் அமைப்புக்கள் என்பவற்றிற்கும் எதிராக கோசங்களை எழுப்பியுள்ளனர்.
வன்னியில் காயம் அடைந்த 300 பேர் திருக்கோணமலை வைத்தியசாலை இன்று இரவு அனுமதிக்கப்படவுள்ளனர்:ICRC [Tuesday, 10 February 2009 04:15 PM]
கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை 10.02.2009 இரவு 10.00 மணியளவில் திருக்கோணமலை துறைமுகத்தை சென்றடையலாம் என துறைமுக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அஷ்ரப் இறங்கு துறையில் கப்பல் தரித்து நின்று அங்கிருந்து இறக்கப்படும் நோயாளர்கள் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமாக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதாக இராணுவம் குற்றச்சாட்டு – BBC: [Tuesday, 10 February 2009 10:02 PM]
இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது...
அரசாங்கம் ஊடகங்கள் மூலம் உதயத்தை காட்டினாலும் கிழக்கு மண்ணில் எந்த உதயமுமில்லை - ஜே.வீ.பீ: [Tuesday, 10 February 2009 01:41 PM]
படையினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில், மாகாண சபையும் மீன்பிடி தொழில் உள்ளிட்ட ஏனைய துறைகள் சம்பந்தமான விடயங்கள் குறித்து மந்தமான கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் மீன்பிடி அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மீன்பிடி குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை : [Tuesday, 10 February 2009 01:39 AM]
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்ற நிலைமை குறித்து..