செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

தூக்குத் தண்டனையின் கொடூரங்கள் - திரைப்படவிழா

 

தமிழர்களின் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் அதனால் ஏற்படும் சமூக அவலத்தை எடுத்துக் காட்டும் நோக்கிலும் திரையிடப்பட்டன.

தூக்குத் தண்டனையின் கொடூரங்கள் - திரைப்படவிழா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

 
தூக்குத் தண்டனை பற்றிய கொடூரங்களைச் சித்திரிக்கும் ஆவணத் திரைப்படங்கள் சென்னைப் பல்கலைக்கழக பவள விழா மண்டபத்தில் திரையடப்பட்டன. தூக்குத் தண்டனையினால் ஏற்படும் கொடூரங்களை எடுத்துக் காட்டும் இந்தத் திரைப்படங்கள் தமிழகத்தை உலுப்பி வரும் மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் அதனால் ஏற்படும் சமூக அவலத்தை எடுத்துக் காட்டும் நோக்கிலும் திரையிடப்பட்டன. 
 
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையினரின் செயற்பாட்டு அமைப்பான திரைவெளி அமைப்பு இந்த திரைப்பட விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் வீ. அரசு, இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத்தலைவர் கோ. ரவீந்திரன், ஆவணப்பட இயக்குனர்களான அமுதன், ஆர்.ஆர். சீனிவாசன் முதலியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். 
 
இந்நகழ்வில் கருத்துரை வழங்கியவர்கள் தூக்குத்தண்டனை விடயத்தில் மூன்று தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதுடன் உலகெங்கிலும் தூக்குத்தண்டனைக் கைதிகளாக படுகொலைய எதிர்கொள்பவர்கள் அனைவரும் காப்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். தூக்குத் தண்டனையினால் பல குடும்பங்கள் அநாதரவு நிலையை அடைந்து தவிப்பபதுவும் சுட்டிக்காட்டப்பட்டது. 
 
இந்நிலையில் தூக்குத் தண்டனை வழங்கி கொல்லப்படும் அதிகாரத்தின் இரக்கமற்ற நடவடிக்கையையும் அதனால் மனிதன் கனவுகள் நிரம்பிய நிலையில் படுகொலை செய்யப்படுவதையும் அவனுக்கு முன்னாள் துடிக்கும் வாழக்கை பற்றிய ஆசையையும் இந்தத் திரைப்டபடங்கள் விபரிக்கின்றன. இத்தகைய ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 
 
 
 
இயக்குனர் kizyszof kieslowski இயக்கிய Short film about killiing (1988, poland) என்ற திரைப்படம் முதலில் திரையிடப்பட்டது. ஒரு இளைஞன் ஒரு கார் டிரைவரை கழுத்தை நெறித்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து காரைத் திருடுகிறான். காவல்துறை அவனைக் கைது செய்து வழக்கு நடத்துகிறது. ஒரு இளம் வழக்கறுஞர் அவனுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிடுகிறார். வழக்கின் இறுதியில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. அரசு நீதியின் பெயரால் மிக சிரத்தையுடன் நடத்தும் கொலை அவன் செய்த முரட்டு கொலையைவிட வன்மானது என்று இந்தப் படம் சொல்லுகிறது.  
 
தொடர்ந்து Nagita Oshima  என்ற இயக்குனரின் Death by Hanging (1968, jappan)  திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தில்  அவன் ஒரு கொரிய பழங்குடி. அவனுக்கு ஜப்பானில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது தப்பித்துக் கொள்ளுகிறான். ஆனால் நினைவு இழந்துவிடுகிறான். அவனைத் தூக்குத் தண்டனை கொடுத்தாக வேண்டும். ஆனால் அவன் நினைவுடன் இருந்து தனது குற்றத்தை உணர்ந்து வருந்த வேண்டும் என்பது சிறைவிதி. அவனுக்கு நினைவு வரவைக்க வேண்டும் என்ற முயற்சியில் காவலர்கள் இறங்குகிகின்றனர். 
 
அந்நினைவுப் பாதையில் ஒரு பெண்ணுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. காவல்துறையினர் தங்களது குற்றங்களையும் நினைவூட்டிக் கொள்ளுகின்றனர். நினைவு திரும்பியதும் அவனுக்கு தூக்குதத்தண்டனை நிறைNடீவற்றப்படுகிறது. ஆனால் அவனின் உடல் காணாமல் போகிறது. கயிறு மட்டும் தொங்கியபடியிருக்க படம் முடிக்கிறது. 
 
இயக்குனர் Tim Robbins,  இயக்கிய dead man walking (1995, English) என்ற திரைப்படம் அடுத்து திரையிடப்பட்டது. ஒரு ஒரு காதல் ஜோடியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மாத்யூ தனது ஆன்மீக ஆலோசகர் சகோதரி ஹெலனிடம் தான் நிரபராதி என்கிறான். அவனைக் காப்பாற்ற அவள் முயல்கிறாள். அவளது முயற்சிகள் தோற்றுப் போகின்றன. இறுதியில் கூடவே அவளுக்குச் சில உண்மைகள் தெரிய வருகின்றன. மாத்யூ தூக்கிலிடப்படுகிறான். தூக்குத்தண்டனையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீள முடியாத துயரத்தில் மூழ்குகின்றனர். 
 
மலையாளத் திரைப்பட இயக்குனர் அடுர் கோபாலசிருச்ணனின் நிழல் குத்து என்ற திரைப்படம் இறுதியாக காண்பிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக திருவாங்கூர் மகாராஜாவால் வழங்கப்பட்ட பல தூக்குகளை நிறைவேற்றிய தூக்குப்போடும் காவலாளி காளியப்பன் இப்போது மிகவும் வயதாகி குற்ற உணர்ச்சியினால் மன ஒளைச்சல் அடைந்து கடும் குடிக்கு அடிமையாகி தன் பாவங்களை மன்னிக்குமாறு தன் குல தெய்வம் காளியிடம் வேண்டுகிறான். தான் கடைசியாக நிறைவேற்றிய தூக்குத் தண்டனையில் ஒரு நிரபராதி கொல்லப்பட்டான் என்று அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறான். இப்போது மறுபடியும் ஒரு அழைப்பு வருகிறது. மன்னரிடமிருந்து மறுபடியும் ஒரு தூக்கை நிறைவேற்ற. தனக்கு துணையாக தனது காநச்தியவாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரனான தன் மகனுடன் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றப்ப புறப்படுகிறான்.  
 
 
 
அனுப்புக Home, Indian News, Literature
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.