விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

கடல் வழியாக வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்

 

கடல் வழியாக வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களில் பலர் காணாமல் போயுள்ளனர்


 

கடல் வழியாக வெளிநாடுகளில் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடல் வழியாக படகுகளின் மூலம் வெளிநாடுகளில் புகலிடம் கோரிய 600க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு என்னவாயிற்று என்பது தெரியவில்லை என ஈழப் புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பின் அமைப்பின் தலைவர் சந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

1980களில் ஆரம்பம் முதல் இவ்வாறு யுத்த வலயத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுப் பயணிகளை அழைத்துச் செல்லும் முகவர்கள் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை துன்புறுத்தி அந்தப் பழியை இந்திய அரசாங்கத்தின் மீது சுமத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாஙகம் இலங்கைத் தமிழ் அகதிகளை நல்ல விதமாக பராமரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரதாசன், இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதி அமரர் தந்தை செல்வாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் வழிப் பயணங்களில் ஆயிரக் கணக்கானோரின் உயிர்கள் காவு

கொல்லப்பட்டுள்ளதாகவும், பயண முகவர்கள் பெருந்தொகை பணத்தை சம்பவதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில இலங்கையர்கள் புகலிடக் கோரிக்கை பெற்று பசுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், பலர் மிகவும் கஸ்டமான அனுபவங்களையும் நெருக்கடிகளையுமே எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்திய அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பல இலங்கையர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் பொறியில் சிக்கிக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக பெருந்தொகைப் பணத்தை செலுத்தி மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணங்களை

மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
10-07-2012, 17:03
 - Posted by piranavan,
இவருடைய உழைப்பிற்க்கு கேடு வந்திட்டுது ஏதோ தான் தமிழர்களின் காவலன் போல் பம்மாத்து காட்டுறார்.இந்தியாவின் ஊது குழல்.சுப்பிரமனியசமியின் எடுபிடி.எக்மோரில் இருக்கும் வீட்டிளும்.நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சொந்தவீட்டிளும் உல்லாசமாக இருந்து கொன்டு.இந்தியா தமிழரை நல்ல விதமாக பரமரித்து வருவதாக முலு பூசனிக்காயை சோத்துக்குள்ள மறைக்கிறார் பாருங்கள்!இவரால் தமிழகத்தில் உள்ள ஏதவது ஒரு அகதிகள் முகாமில் ஒரு நாள் தங்க முடியுமா?அவுஸ்ரேலியாவில் பசுமையாக வாழ்வது இவருடைய அக்கா தான் திருமதி வில்சன்.தனது மகளை அமெரிக்காவில் படிப்பித்து கேரளா மலையாளிக்கு கட்டிக்கொடுத்து மலையாள சம்மந்தி வந்திட்டார்.இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுக்க போய்யா போய் மனைவியையும் துனைவியையும் கவனியும்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.