அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பாணமை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலையை பெரும்பான்மையினத்தவர் சிலர், தகர்த்தெடுத்து, வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
ஆலய பரிபாலன சபையினரின் ஒப்புதல் இன்றி, பெரும்பான்மையினத்தவர் சிலர் ஆலயத்திற்குள் புகுந்து சிலைமை தகர்த்து எடுத்துச் சென்றனர். இது குறித்து ஆலய பரிபாலன சபையினர் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.