செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

காவல்துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – ஜே.வி.பி.

 

காவல்துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – ஜே.வி.பி.

 

காவல்துறை, நீதிமன்றம் மற்றும் அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

காவல்துறை, நீதிமன்றம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அநீதி மற்றும் குற்றச் செயல்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது என்ற உலக உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதியும், நேர்மையும் வெற்றியீட்டக் கூடிய நாள் தொலைவில்லை என லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.