அரசாங்கம் பொதுச் சொத்துக்களை தேர்தல்பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாம் பிரஜைகள் என்ற சிவில் அமைப்பு இந்தகுற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வடமத்திய மாகாண தேர்தல் பிரச்சாரப் பணிக்காக அராசங்கம் சுமார் 200 பொது வாகனங்களை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாணசபைக்கு சொந்தமானநிறுவனங்களைச் சேர்ந்த 75 வாகனங்களும் இதில் உள்ளடங்குவதாக நாம் பிரஜைகள் அமைப்பின் அழைப்பாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்டபல்வேறு அரச சொத்துக்களும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.