இசட் புள்ளி மதிப்பீடு தொடர்பில் புதிய அணுகுமுறை பின்பற்றப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய பழைய பாடத் திட்டங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியரின் இசட் புள்ளி பேறுபேறுகள் தனித் தனியாககணிப்பீடு செய்யப்பட உள்ளன.
இதன்படி 2012ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குதோற்றும் மாணவர்களின் இசட் புள்ளிகள் இரண்டு விதமாக கணிப்பீடு செய்யப்பட உள்ளன.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோற்றுவோருக்குஒரு இசட் புள்ளி பெறுபேறும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தோற்றுவோருக்கு மற்றுமொருஇசட் புள்ளி பெறுபேறும் வெளியீடு செய்யப்பட உள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுநீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.