அனைவரது ஒத்துழைப்புகளையும் எதிர்பார்த்துள்ளதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு :
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருக்கும் இலங்கை மீனவர்களை காப்பற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்புகளையும் எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் தற்போது சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களை விடுதலை செய்து கொள்வதற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபா தேவைப்படுகிறது என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று பேராயர் தலைமையில் நேற்று ஊடகவியலாளர் சந்திபொன்றை நடத்தினர். இலங்கை மீனவர்களை மீட்க அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஒத்துழைப்புகளை எதிர்பார்த்துள்ளதாக பேராயர் கூறியுள்ளார்.