விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிரபாகரனின் பிரதான போர் நடவடிக்கை மையத்திற்கு கேபீயும் 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றனராம்:-

 

பிரபாகரனின் பிரதான போர் நடவடிக்கை மையத்திற்கு கேபீயும் 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றனராம்:-

 

விடுதலைப்புலிகளின் முன்னாள் பிரதான ஆயுத விநியோகஸ்தரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான போர் நடவடிக்கை மையத்திற்கு சென்று அதனை பார்வையிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதன், விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத விநியோகஸ்தராக இருந்த பேரிலும் புதுக்குடியிருப்பில் உள்ள பிரபாகரனின் இந்த போர் நடவடிக்கை மையத்திற்கு சென்றமை இதுவே முதல் முறையாகும். 

இந்த இடத்தை பார்வையிடுவதற்காக கே.பியுடன் வெளிநாடுகளில் இருந்து 22 புலம்பெயர் தமிழர்களும் சென்றிருந்தனர். இந்த பயணத்தை பாதுகாப்பு அமைச்சு  ஏற்பாடு செய்திருந்தது. 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(4) அபிப்பிராயங்கள்
16-08-2012, 10:41
 - Posted by Siva.
ஆவி பிடிக்கப் போய் இருப்பாரோ? குறிப்பிட்ட அந்த 22 கோடரிக் காம்புகளும், அன்றும் KP யின் தயவில் வயிறு வளர்த்தவர்களாகத் தான் இருந்திருப்பார்கள்! புனித பூமியில் பாவ விமோசனம் நிட்சயமாக இவர்களுக்குக் கிடைக்காது!
17-08-2012, 17:01
 - Posted by Nizam
புனித பூமி என்ற சொல் இந்நாட்களில் படும் அவஸ்தையை சொல்லத்தான் வார்ததை இல்லை.

என்ன பாவம் செய்ததோ புனிதம் என்ற சொல்?
17-08-2012, 17:57
 - Posted by Solomon
பிரபாகரனின் பிரதான போர் நடவடிக்கை மையத்திற்கு சென்று அங்கு கால் பதித்து நிற்கும் போது அந்த 22 புலம் பெயர் தமிழர்களும் ஒரு நமட்டு சிரிப்புடன் "...." என்று மனதுக்குள் சொல்லி இருப்பார்களோ ?.
17-08-2012, 19:48
 - Posted by Anonymous
உண்மை யானவர்கள் யார் வாய்மையே வெல்லும் என்பது போய் பொய்மையே வெல்லும் என்பதே இன்றைய நிலை.எத்தனைகாலம் வாழ்ந்து விடப் போகின்றார்கள்.இவர்கள் மண்ணுக்குரிய மகிமை அது மாறாது 15ம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்ட தமிழ் மன்னர்களுடைய வாழ்வு இன்னமும் சபையேற வில்லை தயவு செய்து இந்த அற்பர்களை மனிதர்களாக்கி விடாதீர்கள்.இதுவும் கடந்து போகும் 45ஆயிரம் வருடஙகளுக்கு முன் தண்ணீருக்குள் குமரிக்கண்டம் போனபொதுதான் இமயமலை உருவானது என்று லெமூரிய வரலாறு சொல்கின்றது.இமயமலையில் சிவன் இருப்பதாகத்தானே கதை விடுகின்றது.இன்றய கற்பூரசாமிகள் வரலாற்றை திரும்பிப்பாருங்கள்.உண்மை ஒருநாள் வரும் வெல்லும்.
Mpillai
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.