விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

57 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று கைது

 

57 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று கைது


 

57 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை புல்மோடை கடற்பரப்பில் வைத்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்மோடைக்கு 40 கடல் மைல் தொலைவில் இந்த புகலிடக் கோரிக்கையாளர் படகை மீட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது சிறுவர்களும், எட்டு பெண்களும் கைது செய்யப்பட்டோரில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.