பங்களாதேஷைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சிகரட்டுக்களை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி துலாகல சுசிமாரம விஹாரையில் குறித்த பௌத்த பிக்கு தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.