செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

வடக்கில் வசந்தம் வீசுகிறது - கிழக்கு உதயமாகியது - இனி உதயம் வன்னிக்கும் பயணமாகிறது:-

 

 

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குடிநீர், வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிபர்களின் ஊடாக வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வன்னியில் அதிகளவான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் சகலருக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் வசந்தம் வீசுகிறது - கிழக்கு  உதயமாகியது - இனி உதயம் வன்னிக்கும் பயணமாகிறது:-

17-08-2012  - 10 : 40

'வன்னியின் உதயம் 2012' வன்னி மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.

மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக வவுனியா சென்ற ஜனாதிபதிக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வன்னியின் உதயம் 2012 எனும் தொனிப்பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட அபிவிருத்திகள் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சர்களிடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் கேட்டறிந்து கொண்டார். 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(6) அபிப்பிராயங்கள்
17-08-2012, 22:07
 - Posted by Solomon
எம் தாய் மொழியாம் தமிழ் மொழியை முதன் முதலில் ஐ நா சபையில் பேசிய மனிதன் என்பது தமிழ் வரலாற்றில் அளிக்க முடியாது.

வருஷம் ஒரே ஒரு தடவை , அதுவும் முன்கூட்டியே ஒளி பதிவு செய்வதையே வரி வரியாக ... வாசித்தவருடன் தமிழ் மொழி தன் தாய் மொழியாக இல்லாவிடாலும் எந்த துண்டும் கையில் இல்லாமல் தன் "சிந்தனையை" தமிழில் கூறும் ராஜாபக்சை ஒரு ராஜபட்டைதான் போங்கள்!. மேச்ச வேண்டிய முயற்சி.

இந்த அழகான ஒளிப்பதிவை தந்த உங்களுக்கும் நன்றிகள் பல. எம் ஜி ஆர் போல் எப்பிடி பொன்னாய் ஜோலிக்காறு ?...ம்ம்ம்ம்
18-08-2012, 02:14
 - Posted by Anonymous
முள்ளிவாய்க்கால் தமிழின கொலையாளி வன்னிக்கு சென்றது தமிழ் மக்கள் மீது கொன்ட பாசத்தால் அல்ல, ஜ நா வில் இருந்து வரப்போகின்ற வர்களிடம் ஏதாவது கொலை சம்மந்தமான ஆதாரங்கள் கிடைத்து விடுமோ என்ற நடுக்கத்தில் தனது கைக்கூலிக்ளிடம் ஆலோசனை கேட்பதற்க்கு சென்றாரே தவிர வேறு எதற்க்கும் இல்லை, கொலையாளியின் முகத்திலே மூதேவி வாலாயம் குடியேறிவிட்டது, நரமாமிசம் தின்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனை வருவதால் அதிகாரிகள் எவரும் கூட்டத்துக்கு செல்லவில்லையாம், ராஜன்.
18-08-2012, 08:00
 - Posted by Siva.
<< >>
( தலைவருக்குத் தப்பாக ஐ நாவில் முதலிடம் வழங்கியவருக்குச், 'சமர்ப்பணம்')

தான் விரும்பும் தலைவன் குறித்து வாயாரப் புகழும் உரிமையும் சுதந்திரமும் சொலமனுக்கு நிறையவே உண்டு! அதுவல்ல இங்கு பிரச்சனை. ஒருவர், தான் விரும்பும் இடத்தில் விரும்பும் மொழியில் பேசுவது போல் பாவனை செய்து வாசிக்க,'Teleprompter', என்று ஒரு சாதனம் இருப்பதும், அதைப் பயன்படுத்துபவர் கையில் எந்தக் காகிதத் துண்டும் வைத்திருக்க வேண்டியதில்லை என்பதும், இந்தக் கணனிப் பு..., இல்லை இல்லை, சிங்கம் அறியவில்லைப் போலும்! இலங்கைத் தீவின் வட கோடிக் கிராமமொன்றில் வாழும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு கந்தப்புவாலும்,ஏன் என்னாலும் கூட, சிங்களத்தில் சரளமாகப் பேசும் வல்லமை இருக்கும் போது, தென் கோடியில் ஹம்பந்தோட்டவில் பிறந்து, 45 வருடங்களாக அரசியலில் இருக்கும் மகிந்த, இதை விட அழகாகத் தமிழைப் பேசவில்லையே!, என்று வெட்கப்படுவதை விடுத்து, வாழ்த்த இதில் என்ன இருக்கிறது? மகிந்த, தான் வேற்று மொழியில் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பயன்படுத்த,'Teleprompter ' ,சாதனத்தையும் இரு வல்லுனர்களையும் அழைத்துப் போவதான செய்திகள் அண்மையில் பத்திரிகைகளில் செய்தியாக வந்ததை இச் சிங்கம் அறியவில்லைப் போலும்!

அது சரி! இந்தச் சொலமன், எம் தாய் மொழியாம் தமிழ் மொழியை என்றைக்குத் தான் எழுத்துப் பிழைகளின்றி எழுதக் கற்றுக்கொள்ளப் போகின்றாரோ? தப்பாக எழுதுவதை விட, எழுதாமல் இருப்பது மேல்!, என்பதே என் கருத்து.
19-08-2012, 02:54
 - Posted by Solomon
பக்கத்து வீட்டு பரமசிவனும் தமிழ் பேசலாம் ஆனால் ஒருவன் ஐ நா சபையில் தமிழ் பேச (அதுவும் எதிரி மொழி என்ட்று சிங்களன் எண்ணுவதாக தமிழர்கள் எண்ணும் ) ஒரு "ஓருமையும்" நல்ல மனமும் , உண்மையான தலைவனாகவும் இருக்கவேண்டும். அது தான் ராஜபக்சை.

ஐ நா சபையில் என் தமிழை பேசிய முதல் மனிதன். சரித்திரம் மாறாது. நீங்கள் தலைகீளாக நின்று "அவரு யாழ்ப்பாணத்து
தமிழ் பேச வில்லை அதனால் அது தமிழ் இல்லை என்று லூச்சுத்தன்மாக சொன்னாலும் சொல்லுவீங்கோ.. ஹ ஹ
19-08-2012, 13:37
 - Posted by Siva.
<<< .... லூச்சுத்தன்மாக சொன்னாலும் சொல்லுவீங்கோ.....>>>

லூசுத் தனமாக எழுதுவதும் விமர்சனம் செய்வதும் யார், என்பதை குளோபல் தமிழ் இணைய வாசகர்கள் நன்கு அறிவார்கள்? அது என்ன , குஞ்சு, பிஞ்சு, கண்ணு, ஹஹா, ஹி ஹீ போன்ற கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள்? எழுதியதைப் பதிவு செய்யுமுன், ஒரு முறை சரி பார்க்கும் அறிவு கூட இல்லாத இந்த ஜன்மம், விதண்டாவாதம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, மகிந்த , பிள்ளையான், கருணா போன்றோரைத் தூக்கிப் பிடிக்கிறது, என்பதும் வெளிப் படை! திருந்தாத ஜன்மம் இருந்தென்ன லாபமோ, தெரியவில்லை!
19-08-2012, 15:16
 - Posted by Solomon
அடபாவிகளா அன்பாக "குஞ்சு !", கண்ணா !" ,என்று அழைத்தால் கூட குற்றமா ?. கடவுளே !! கடவுளே!! ....இந்த அழகான அன்பான தமிழ் சொற்கள் எப்போது// ' கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்கள்? // ஆகின ?.

//அறிவு கூட இல்லாத இந்த ஜன்மம்,// உங்கள் தமிழ் உலகில் கண்ணியமான வார்த்தை பிரயோகமா கண்ணா ?

ப,,,, இல்லாத தமிழர்களை மிக அதிகமாக கொன்ற 'ஒரே தமிழனை' தூக்கி பிடித்தால் 'அறிவு கொழுந்து" என்று அழைப்பீர்களோ ?. நல்லா இருக்கு....
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.