வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
குடிநீர், வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிபர்களின் ஊடாக வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வன்னியில் அதிகளவான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் சகலருக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் வசந்தம் வீசுகிறது - கிழக்கு உதயமாகியது - இனி உதயம் வன்னிக்கும் பயணமாகிறது:-
17-08-2012 - 10 : 40
'வன்னியின் உதயம் 2012' வன்னி மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்
வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காக வவுனியா சென்ற ஜனாதிபதிக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
வன்னியின் உதயம் 2012 எனும் தொனிப்பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட அபிவிருத்திகள் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சர்களிடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் கேட்டறிந்து கொண்டார்.