செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் - தீபச்செல்வன்

 

யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் -  தீபச்செல்வன்


தீபச்செல்வன்

 
ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும்
சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது  
குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம்
செல்துளைத்த ஓட்டைக்குள்ளால் 
பள்ளியிலிருந்து பார்த்த பொழுது 
அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது
வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில் 
ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர்
யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான்
கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில்
விளையாடும் குழந்தைகளில்லை
குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது
கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த
குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுபடுத்தும் யுத்தக்கல்
விழுந்தது காலற்ற சிறுவனின் முதுகுமீது.
 
 
அனுப்புக Home, Literature
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
18-08-2012, 06:03
 - Posted by Anonymous
தீபச்செல்வனுக்கு எனது வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு கவிதை படித்ததன் மூலம் எனது கவிஞனைத் தழுவியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.