நடுக் கடலில் நிர்க்கதியாயிருந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், படகில் பயணம் செய்தோர் நிர்க்கதியான நிலையில் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படகில் 19 தமிழர்களும், 11 சிங்களவர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவு மற்றும் குடிநீர் வசதியின்றி இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்லற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, நீர்கொழும்பு, சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.