மகன் காணாமல் போயுள்ளார்:-
கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர்.
4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.