சீஷெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி அலிக்ஸ் மிச்சல் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 23ம் திகதி வரையில் சீஷெல்ஸ் ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளுடன் சீஷெல்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச நிறுவகத்தில் ஜனாதிபதி அலிக்ஸ் மிச்சல் விசேட உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.