இந்த நூற்றாண்டின் மாபெரும் அவலங்களில் ஒன்று வன்னியில் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்தேறியிருக்கிறது. இந்த மாபெரும் அவலத்துள் தமிழ் மக்கள் ஏராளமானோர் படுகொலைக்காளாகி இருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுடைய உடமைகள் எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவை தொடர்பான ஆவணப்படுத்தல்களோ தரவுகளோ இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக இல்லை. இந்நிலையில் அவற்றை ஆவணப்படுத்துவதன் முதற்கட்டமாக இந்தக் கொடூர யுத்தத்துள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்ட குளோபல் தமிழ் நியூஸ் தீர்மானித்துள்ளது. கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை புலம் பெயர்ந்து வாழும் அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது இலங்கையில் வாழும் அவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இவ்விணையத்தில் இணைப்பதனூடாக இந்த ஆவணப்படுத்தலுக்கு உதவி புரிய முடியும்.