Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Thursday, 09 September 2010
01:10 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
வவுனியா பிரதேசத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி வர்த்தகர்களிடம் உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் வவுனியா காவற்துறையின் உயரதிகாரி. ஜீரிஎன் செய்தியாளர்
27 July 10 11:52 am (BST)
இவர் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் இவரை விசாரணை செய்த பொலிசார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆயினும் கடத்தப்பட்ட வர்த்தகரோ அல்லது பொலிசாரோ இவரைக் கடத்திச் சென்றவர் யார் என்பதை வெளியிடவில்லை.
வவுனியா இலங்கை வங்கிக்கு முன்பாக லொட்ச் ஒன்றை நடத்தி வரும் புஷ் என பட்டப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் நேற்றிரவு வீடு செல்லும் வழியில் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று 24ம் திகதி சனிக்கிழமை இவர் ஒரு மதுபானச்சாலை ஒன்றைத் திறக்கவிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார் ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
27 July 10 11:52 am (BST)
வவுனியா பிரதேசத்தி;ற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி வர்த்தகர்களிடம் உறுதி. வவுனியாவில் இடம்பெற்ற வர்த்தகர் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் வவுனியா காவற்துறையின் உயரதிகாரி.
வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டு கப்பமாகப் பணம் பெற்றதன் பின்னர் விடுதலை செய்யப்பட்ட வர்த்தகரின் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு வார காலத்த்pல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா காவல்துறையின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கடையடைப்பு செய்து எதிர்ப்பு நடவடிககையில் ஈடுபட்டிருந்த முக்கிய வர்த்தக பிரமுகர்களை வவுனியா நகருக்கு வந்து சந்தித்த வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வவுனியா பிரதேசத்தில் இனிமேல் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இடம்பெறாத வண்ணம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று உத்தரவாதமளித்துள்ளார்.
இந்தக் கடத்தல் சம்பவத்தையடுத்து, கடத்தல், கப்பம்கோரல், கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்தும், அவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரி வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடைகளை அடைத்து. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கடையடைப்பு காரணமாக வவுனியா நகரிலும் சுற்றுப்புறங்களிலும் செவ்வாயன்று வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்திருந்தன. எனினும் பாடசாலைகள், அரச தனியார் அலுவலகங்கள், வங்கிகள் என்பன வழமைபோல இடம்பெற்றன. போக்குவரத்துச் சேவைகளும் நடைபெற்றன.
கடையடைப்பு செய்த வர்த்தகர்களும் வர்த்தகநிலைய ஊழியர்களும் வவுனியா வர்த்தகர் சங்க அலுவலகத்தின் முன்னால் அமைதியாகக் கூடி அமர்ந்திருந்தார்கள். இவர்களுடன் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபை உறுப்பினர்கள், இந்து, கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாம் மதத் தலைவர்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டார்கள்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை வந்து சந்தித்த காவல்துறையின் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வவுனியாவில் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், கொழும்பிலும் பாதாள உலக கோஸ்டியினர் இவ்வாறான கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், பொதுமக்கள், வர்த்தகர்களின் உதவியோடு அவர்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதேபோன்று இங்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொதுமக்களும் வர்த்தகர்களும் பொலிசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் தகவ்களைத் தந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வவுனியா வர்த்தகர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிசாருக்கு எந்தவிதமான முறைப்பாடும் செய்யப்படவில்லை என்றும். இருந்தும் தமக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு கடத்தலக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

இந்தச்சம்பம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், தானும் இதில் நேரடி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரும் வவுனியா பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்திருப்பதாகவும், எனவே இத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடைபெறாவண்ணம் பொதுமக்களினதும் வர்த்தகர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வோம் என உத்தரவாதமும் வழங்கியுள்ளார்.
வர்த்தகர் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து வவுனியா நகரில் நாளைய தினம கடையடைப்பு வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் கப்பப் பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை – ஜீரிஎன் செய்தியாளர் :
2010‐07‐26 06:52:13
2010‐07‐26 06:52:13
வெள்ளிக்கிழமை இரவு கடத்தப்பட்ட வர்த்தகர் 6 லட்ச ரூபா பணம் கப்பமாக செலுத்தப்பட்டதன் பின்னர் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வாடி வீட்டு உரிமையாளராகிய புஷ் என்றழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜா (47) என்ற வர்த்தகர் வெள்ளிக்கிழமை இரவு கடத்திச் வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு 6 லட்சம் ரூபா கப்பமாகப் பணம் செலுத்தப்பட்டதையடுத்து மறுநாள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழமைபோல வாடிவீட்டில் தனது வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்ற வேளை தோணிக்கல் ஐயா வாசிகசாலை பகுதியில் வெள்ளைவானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட இவரிடம் ஒரு கோடி ரூபா கப்பப்பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் 6 லட்ச ரூபா பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் இவரை விசாரணை செய்த பொலிசார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆயினும் கடத்தப்பட்ட வர்த்தகரோ அல்லது பொலிசாரோ இவரைக் கடத்திச் சென்றவர் யார் என்பதை வெளியிடவில்லை.
யுத்தம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் பகிரங்கமாக, பலத்த பாதுகாப்பு நிலவுகி;ன்ற வவுனியா பிரதேசத்தில் இவ்வாறு இனந்தெரியாத வெள்ளைவான் கோஷ்டியினர் இவ்வாறு வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று கப்பம் பணத்தை வசூலித்துக் கொண்டு விடுதலை செய்திருப்பது வவுனியா பிரதேச வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைக்கு வர்த்தகர் சங்கம் எற்பாடு :
வவுனியா வாடிவீட்டு உரிமையாளராகிய வர்த்தகர் மாரிமுத்து கதிர்காமராஜா கடத்திச் செல்லப்பட்டதைக் கண்டித்தும் கடத்தல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடையடைப்பு செய்வதற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடைகளை முழுமையாக மூடுவதுடன், காலை 9 மணி தொடக்கம் 11 மணிவரையில் அனைத்து வர்த்தகர்கள், வர்த்தக நிலைய ஊழியர்கள் அனைவரையும் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் எதிரில் கூடி அமைதியாக அமர்ந்து தமது எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த முன்வருமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வவுனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
யுத்தம் முடிந்து இயல்பு நிலைமை ஏற்படத் தொடங்கியுள்ள இந்த வேளையில் இத்தகைய கடத்தல் சம்பவங்களும் கப்பம் கேட்கும் செயல்களும் நிறுத்தப்பட்டு வர்த்தகர்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகருக்கு வெளியில் கிராமப்பகுதிகளிலும் கொள்ளைகள் களவுகள் இடம்பெற்று வருவதாகவும் ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் இவற்றை அனுமதிக்க முடியாது என்றும், யுத்த காலத்தைப் போன்ற ஓர் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்ற தீய சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் பாதுகாப்புத் தரப்பினரை வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியாவில் நேற்றிரவு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர்
24 July 10 01:42 pm (BST)
24 July 10 01:42 pm (BST)
வவுனியா இலங்கை வங்கிக்கு முன்பாக லொட்ச் ஒன்றை நடத்தி வரும் புஷ் என பட்டப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் நேற்றிரவு வீடு செல்லும் வழியில் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று 24ம் திகதி சனிக்கிழமை இவர் ஒரு மதுபானச்சாலை ஒன்றைத் திறக்கவிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார் ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
1 Comment(s)
கல்கி on 2010-07-26 13:35:43 (BST)
நான் கூறிய கருத்துக்கள் ஒற்றப்படையான விவாதத்துக்குள் மட்டும் நின்றுகொள்ளும் காரணத்தினால் இனிமேலும் இது விடயத்தில் வாதம் புரிவதில்லை என்பதை உங்களது இறுதி ஆக்கத்தில் தெரிவித்திருந்தீர்கள். எங்களது வாதத்தில் அவரோகணத்தை ஆராதிக்கும் புள்ளியை நானும் ஆமோதித்து அதற்கு முன்னர் எனது கருத்தினை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களது முதல் ஆக்கத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள் ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவதுஇ புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது என்ற விடயங்களை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. அதேவேளை ஈழத்தமிழர்களது எதிர்காலப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் பாதையில்இ விடுதலைப்புலிகள் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்ற உங்களது கருத்தினைஇ ஆழமாக நோக்கும்போது அதில் என்னால் உடன்படமுடியாத கூற்றினையே இப்போதும் நான் கூறவிரும்புகிறேன். ஏனெனில்இ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆயுதவழிப்போராட்டம் ஒன்றே சிங்களத்தீவின் ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான வழிவகையாக அமைந்திருந்தது. இப்போதும்கூடஇ சிங்களதேசத்தின் நடவடிக்கைகள் அவர்களுடனான சமரசத்துக்கோ சமாதான வழிமுறைக்கோ சாதகமாக உள்ளதாஇ அவ்வாறெனில் இதற்கு இறுதிவழிதான் என்ன என்பவற்றை ஆழமாக நோக்கும்போது இதற்கு புலிகள்தான் சரி என்று புலி எதிர்ப்பார்களுக்கும் அசரீரி கேட்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே விடுதலைப்புலிகள் பயணித்த பாதையே தமிழர்களின் உரிமை போராட்ட வெற்றிக்கு சரியானது என்று இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும் வரலாறு கூறத்தான் போகிறது. அதில் எனக்கு இருநூறு வீத நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறான ஒரு நிலையில்இ விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உர்மைக்காக போராடும் எதிர்கால அமைப்பு ஏதாவதற்கு "திருத்தப்பட்ட விடுதலைப்புலிகள்" என்ற பிழையான கருத்துருவாக்கத்தை கொடுத்தவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். பிழைகளே விடாத தமிழர் விடுதலை அமைப்பு ஒன்று தமிழர் உரிமையை பெற்றுத்தந்தது என்ற எதிர்கால வரலாற்றை ஏழுத முடியுமானால் அதற்கு ஏற்றவாறான ஒரு அமைப்பையோ களத்தையோ அல்லது அதற்கு ஏற்ற விமர்சனத்தையோ முன்வைத்து உங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள். ஆனால்இ முப்பது வருடங்களாக ஒரு இனத்தின் உரிமைக்காக தன்னை வரித்துக்கொண்ட இயக்கம் இன்று அழித்தொழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விட்ட பிழைகளை திருத்தி சரியான வழியில் அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்வதெல்லாம் அந்த அமைப்பை அசிங்கப்படுத்தும் செயல். அத்துடன்இ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஆயிரம் கெட்ட காரியங்களும் ஐந்து நல்ல காரியங்களும் செய்தது என்றுகொண்டும் அல்லது அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் ஐந்து கெட்ட காரியங்களையும் செய்தார்கள். ஆனால் அந்த ஐந்து கெட்ட காரியங்களும் அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் கெடுத்துவிட்டன என்றும் எடுகோள்களுடனும் உள்ளவர்கள் ஏன் அந்த அமைப்பு விட்ட தவறுகளை திருத்தி இனி புதிய பாதையில் பயணிக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் அவர்களைவிட நற்பாதையில் பயணித்த வேறேதாவது அமைப்பையோ அல்லது இப்போதும் தமிழ்மக்களின் கொள்கைகளுக்கும் ஏற்றவாறாக உள்ள அமைப்பையோ பிடித்து அவை இழைத்த தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடராலாமே? அதைவிடுத்துஇ எதிர்கால சந்ததிக்கு வரலாறாக அமையப்போகும் ஒரு அமைப்பை திருத்தினோம் திருத்தினோம் என்று கூறிக்கொண்டுஇ அந்த அமைப்பு தவறுவிட்டது தவறுவி்ட்டது என்ற கருத்தினையே ஆழ வலியுறுத்தும் வலி மிகுந்த முயற்சி வேண்டாம் அருண்மொழிவர்மன். அது வரலாற்றுக்கு தவறாக இடுகின்ற அத்திபாரம். இதில் புலிகளால் ஆகாதது இனி ஒருவராலும் செய்யப்படக்கூடாது என்றெல்லாம் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கவில்லை. அது நடந்தால்இ அந்த மகிழ்வை துயிலுமில்லங்களில் உறங்கும் அந்த தெய்வங்களுடன் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடும்போது இப்படியொரு வழியில் தீர்வை எடுத்திருக்கலாமே என்று அந்த கல்லறைகளை கட்டியணைத்து அழுவோம். ////////////// என்னை பாதித்த ஆக்கம் உங்களுக்காக நன்றி! மருதன். -அலையோசை
நான் கூறிய கருத்துக்கள் ஒற்றப்படையான விவாதத்துக்குள் மட்டும் நின்றுகொள்ளும் காரணத்தினால் இனிமேலும் இது விடயத்தில் வாதம் புரிவதில்லை என்பதை உங்களது இறுதி ஆக்கத்தில் தெரிவித்திருந்தீர்கள். எங்களது வாதத்தில் அவரோகணத்தை ஆராதிக்கும் புள்ளியை நானும் ஆமோதித்து அதற்கு முன்னர் எனது கருத்தினை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களது முதல் ஆக்கத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள் ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவதுஇ புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது என்ற விடயங்களை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது. அதேவேளை ஈழத்தமிழர்களது எதிர்காலப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் பாதையில்இ விடுதலைப்புலிகள் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்ற உங்களது கருத்தினைஇ ஆழமாக நோக்கும்போது அதில் என்னால் உடன்படமுடியாத கூற்றினையே இப்போதும் நான் கூறவிரும்புகிறேன். ஏனெனில்இ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆயுதவழிப்போராட்டம் ஒன்றே சிங்களத்தீவின் ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான வழிவகையாக அமைந்திருந்தது. இப்போதும்கூடஇ சிங்களதேசத்தின் நடவடிக்கைகள் அவர்களுடனான சமரசத்துக்கோ சமாதான வழிமுறைக்கோ சாதகமாக உள்ளதாஇ அவ்வாறெனில் இதற்கு இறுதிவழிதான் என்ன என்பவற்றை ஆழமாக நோக்கும்போது இதற்கு புலிகள்தான் சரி என்று புலி எதிர்ப்பார்களுக்கும் அசரீரி கேட்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே விடுதலைப்புலிகள் பயணித்த பாதையே தமிழர்களின் உரிமை போராட்ட வெற்றிக்கு சரியானது என்று இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும் வரலாறு கூறத்தான் போகிறது. அதில் எனக்கு இருநூறு வீத நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறான ஒரு நிலையில்இ விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உர்மைக்காக போராடும் எதிர்கால அமைப்பு ஏதாவதற்கு "திருத்தப்பட்ட விடுதலைப்புலிகள்" என்ற பிழையான கருத்துருவாக்கத்தை கொடுத்தவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். பிழைகளே விடாத தமிழர் விடுதலை அமைப்பு ஒன்று தமிழர் உரிமையை பெற்றுத்தந்தது என்ற எதிர்கால வரலாற்றை ஏழுத முடியுமானால் அதற்கு ஏற்றவாறான ஒரு அமைப்பையோ களத்தையோ அல்லது அதற்கு ஏற்ற விமர்சனத்தையோ முன்வைத்து உங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள். ஆனால்இ முப்பது வருடங்களாக ஒரு இனத்தின் உரிமைக்காக தன்னை வரித்துக்கொண்ட இயக்கம் இன்று அழித்தொழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விட்ட பிழைகளை திருத்தி சரியான வழியில் அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்வதெல்லாம் அந்த அமைப்பை அசிங்கப்படுத்தும் செயல். அத்துடன்இ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஆயிரம் கெட்ட காரியங்களும் ஐந்து நல்ல காரியங்களும் செய்தது என்றுகொண்டும் அல்லது அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் ஐந்து கெட்ட காரியங்களையும் செய்தார்கள். ஆனால் அந்த ஐந்து கெட்ட காரியங்களும் அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் கெடுத்துவிட்டன என்றும் எடுகோள்களுடனும் உள்ளவர்கள் ஏன் அந்த அமைப்பு விட்ட தவறுகளை திருத்தி இனி புதிய பாதையில் பயணிக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் அவர்களைவிட நற்பாதையில் பயணித்த வேறேதாவது அமைப்பையோ அல்லது இப்போதும் தமிழ்மக்களின் கொள்கைகளுக்கும் ஏற்றவாறாக உள்ள அமைப்பையோ பிடித்து அவை இழைத்த தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடராலாமே? அதைவிடுத்துஇ எதிர்கால சந்ததிக்கு வரலாறாக அமையப்போகும் ஒரு அமைப்பை திருத்தினோம் திருத்தினோம் என்று கூறிக்கொண்டுஇ அந்த அமைப்பு தவறுவிட்டது தவறுவி்ட்டது என்ற கருத்தினையே ஆழ வலியுறுத்தும் வலி மிகுந்த முயற்சி வேண்டாம் அருண்மொழிவர்மன். அது வரலாற்றுக்கு தவறாக இடுகின்ற அத்திபாரம். இதில் புலிகளால் ஆகாதது இனி ஒருவராலும் செய்யப்படக்கூடாது என்றெல்லாம் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கவில்லை. அது நடந்தால்இ அந்த மகிழ்வை துயிலுமில்லங்களில் உறங்கும் அந்த தெய்வங்களுடன் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடும்போது இப்படியொரு வழியில் தீர்வை எடுத்திருக்கலாமே என்று அந்த கல்லறைகளை கட்டியணைத்து அழுவோம். ////////////// என்னை பாதித்த ஆக்கம் உங்களுக்காக நன்றி! மருதன். -அலையோசை
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
-
2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
-
18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
-
18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
-
3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
-
உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
உங்கள் கருத்துக்கள்
R.Mohan
09 September 10 01:25 am (BST)
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென கூறும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயா கடைசியாக இடம்பெற்ற அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? என்பதை தெளிவுபடுத்துவாரா?
09 September 10 01:25 am (BST)
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென கூறும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயா கடைசியாக இடம்பெற்ற அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? என்பதை தெளிவுபடுத்துவாரா?
Solomon
09 September 10 12:22 am (BST)
ரெம்ப குழம்பி போய் இருக்கிறோம்
09 September 10 12:22 am (BST)
ரெம்ப குழம்பி போய் இருக்கிறோம்
Solomon
08 September 10 10:25 pm (BST)
EPRLF இல் என்னக்கு பிடித்தமானது அவர்கள் முஸ்லிம்களை அனுசரித்து தலைவர் அஷ்ராபுடன் சேர்ந்து ஒரு தமிழ் இனமாக வாழ முடியும் என்று சாதித்து காடியவர்கள்
08 September 10 10:25 pm (BST)
EPRLF இல் என்னக்கு பிடித்தமானது அவர்கள் முஸ்லிம்களை அனுசரித்து தலைவர் அஷ்ராபுடன் சேர்ந்து ஒரு தமிழ் இனமாக வாழ முடியும் என்று சாதித்து காடியவர்கள்



